

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தனர்? எதை நோக்கி இவர்களின் பயணம் சென்றுகொண்டே இருக்கிறது? இவர்கள் தானாகவே வருகிறார்களா? அல்லது யாரேனும் தள்ளி விடுகிறார்களா? இவர்களின் நோக்கம் தான் என்ன?
இந்த படங்களை பார்த்ததும் என் மனதில் பதிலில்லா பல கேள்விகள் எழுந்தன... இந்த சிறுவர்களை பார்க்கும்போது இவர்கள் வேலை பார்த்து இவர்களின் வயிற்றுப்பசியை தீர்க்கிரார்களா? அல்லது மற்றவர்கள் தங்களின் வயிற்றுப்பசிக்காக இவர்களை இந்த பாழுங்கிணற்றில் தள்ளி விடுகிறார்களா?
குழந்தை தொழிலாளர் தடை சட்டம் வந்த பிறகும் கூட இன்னும் குழந்தை தொழிலார்கள் குறைந்தபாடில்லை.... பல இடங்களில் நான் இன்னும் குழந்தைகள் தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தின் வயிற்றுப்பசியை தீர்ப்பதற்காக வேலைக்கு செல்வதை நேரில் காண்கையில் மனதிற்குள் ஒரு நெருடல் ஏற்படுகின்றது...
இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும்போது அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது எனக்கு கோபம் வரும்... நான் அவர்களை தட்டி கேட்க வேண்டும் என்று நினைப்பேன்.. ஆனால் நானும் ஒரு சிறுவன் என்பதால் என் மனதில் ஒருவித பயம் இருந்தது, அவர்களை தட்டி கேட்டால் என்னை அடிக்க வந்துவிடுவார்களோ என்ற ஒரு பயம்...
எனவே உங்கள் கண்களில் இதுபோன்ற சிறுவர்கள் தென்பட்டால் உடனே அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்... பின்பு அவர்களின் பெற்றோர்களை பார்த்து பேசி உங்களால் முடிந்த அளவிற்கு அந்த குழந்தை படிப்பதற்கு உதவி செய்யுங்கள்... இல்லையென்றால் அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டு அந்த குழந்தைகளை ஆசிரமத்திற்கு அழைத்து சென்று அங்கு சேர்த்துவிடுங்கள்... அவர்கள் அந்த குழந்தைகளை படிக்க வைப்பார்கள்... உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டு இவர்களை போன்ற பல குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை வரவழையுங்கள்..... நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு ஒரு தகவல் சொல்லுங்கள், இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும்போது.....
அகரம் அறக்கட்டளை : http://agaram.in/contact
Facebook Account : https://www.facebook.com/agaramfoundation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக