சிறந்த நேரம்

homepage uhren clock for blog

உதவு அல்லது உதவுபவர்களுக்கு வழிவிடு.....

புதன், 7 மார்ச், 2012

வெளிநாட்டில் முதுகலை பட்டம் படிக்க ஸ்காலர்ஷிப்


மஹேந்திரா ஸ்காலர்ஷிப்!


ட்டப் படிப்பு முடித்துவிட்டு முதுநிலைப் பட்டப் படிப்பை ஏதேனும் ஒரு வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை பூர்த்திசெய்கிறது, கே.சி. மஹேந்திரா கல்வி அறக்கட்டளை.

வெளிநாட்டில் ஏதேனும் ஓர் பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஓர் துறையில் இந்த ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் உதவித்தொகை அளித்து உதவுகிறது கே.சி. மஹேந்திரா கல்வி அறக்கட்டளை. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள்தான். ஆனால், 2012 ஜூன் இறுதிக்குள் இளநிலைப் பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பங்களை கே.சி. மஹேந்திரா கல்வி அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது அறக்கட்டளையின் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.  முதல் கட்டமாக மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு  மே மாத இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 31.
விவரங்களுக்கு : http://www.nanhikali.org/aboutus/grant_scholarships.aspx
விண்ணப்ப படிவத்திற்குhttp://www.nanhikali.org/aboutus/images/application_formTRUST.pdf

கருத்துகள் இல்லை: